மட்டக்களப்புத் தேர்தல் ஏனோ தானோ ஆனதாக இருக்கிறது.. தமிழர்கள் மத்தியில் தான் குழப்ப நிலை என்றால் முஸ்லிம் சமூகத்திலும் இதே நிலைமை தான்... காத்தான்குடி ஹிஸ் வேட்பாளர் தங்கள் ஊரில் சொல்லியிருக்கிறார் "நீங்க வோட்டுப் போடாட்டிலும் பரவாயில்ல எனக்குத் தமிழ் மக்கள் போடுவானுகள். அவனுகளுக்கு காசக்காட்டினால் போதும்" என்று தமது இருப்பு கை நழுவிப்போகின்றதால் இவ'வாறு புலம்பியிருக்கிறார்.
இது சரி போலத்தான் தெரிகிறது.. இன்று ஒரு பிரசாரக்கூட்டத்தில் தமிழ்ப்பிரதேசத்தில் இவருக்கு பாராட்டு விழாவாம் அங்கு இவர் உரை நிகழ்த்தும் போது இவரது செயலாளர் கூறியிருக்கிறார் " தமிழர்களே நீங்கள் வோட்டுப்பாடாவிட்டாலும் பரவாயில்ல நீங்க தந்த இந்த மரியாதையும் பாராட்டு நிகழ்வும் எங்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்கும் வாழ்நாளில் மறக்கமுடியாதான நிகழ்வாக இது உள்ளது" என்றிருக்கிறார்.
இத்தமிழ்கிராமத்திற்கு இந்த ஹிஸ் ஆனவர் பல உதவிகளைச் செய்திருக்கிறாராம். அதனால் இவருக்குத் தானாம் வோட்டுப்போடனுமாம்.
இவருக்குத் தெரியாது இதற்கு முதல் அமிர் நாயகன் தான் வந்து இதே பாராட்டையும் வாழ்த்தையும் பெற்றுச் சென்றவர்.
இதுக்கெல்லாம் காரணமானவர் ஒரு பிள்ளையார் கோவில் கட்டுராராம். அவரின் தம்பி கூட ஒரு போராளி இசைத்துறையில் விற்பன்னன் சீயான் சேது போன்றவர் .இப்போது கட்டாரில் வசிக்கிறார்.
தமிழினமே கேளடா
அழிவது யாரடா
அழிப்பது யாரடா
0 comments:
Post a Comment