Wednesday, April 7, 2010
கூட்டமைப்புக்கு எதிராகவும் துண்டுப்பிரசுரங்கள் விழிதெழும்நேரமிது
மட்டகளப்பு வாக்கு வங்கி த.தே.கூட்டமைப்பு என்ற ஒரு நிலை இந்தத்தேர்தலுக்கு முன்னர் காணப்பட்டது. ஆனால் இந்தமுறை இவர்களின் போக்கு காரணமாக அவர்களின் தலைமைத்துவ சீரழிவின் காரணமாக இதுவரை உடுத்திக்கொண்ட வேசங்கள் தெரியவந்ததையிட்டு இப்பொழுது தமது பிரதிநிதிகளை இழந்து தமிழ்மக்கள் மத்தியில் கடும் விமர்சனத்துக்குள்ளாகின்றனர். இதனால் விழித்தெழுந்த மட்டக்களப்பு சமூகம் கூட இப்பொழுது இவர்களை நம்பி பயனில்லை என்ற கருத்தினை வைத்து துண்டுப்பிரசுங்களை வெளியிட்டு வருது இவர்களின் இருப்பை குறைத்துக்கொண்ட நிலைப்பாடாக இருக்கிறது தெட்டத்தெளிவாகப் புலப்படுகிறது.
Labels:
இலங்கை,
தேர்தல் களம்,
பாராளுமன்றத்தேர்தல்,
மட்டக்களப்பு
Tuesday, April 6, 2010
சிந்திக்கும் இறுதி நேரம்
பாராளுமன்றத் தேர்தல் நாளை மறுதினம். படக் படக்கென்று த. தே. கூட்டமைப்பு இருக்கும் தருணம். மட்டக்களப்பில் தேர்தல் முடிவுகள் எதிர்வுகூறப்படுகின்றது. வெற்றிப்படகு முதன்முதலில் ஆட்சிப்பீடம் ஏற்கப்போவது முடிவாகிவிட்டது. தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தனது தேர்தல் பிரச்சாரங்களை 04-04-2010 ஞாயிற்றுக்கிழமை முடிவுக்கு கொண்டுவந்தது. தமது இறுதிப்பிரச்சாரத்திற்கு 8000 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து சிறப்பித்தனர். முற்றிலும் வெற்றி நிச்சயம் என்ற தொனிப்பொருள் கண்கூடாகத் தெரிந்தது.
அனைத்து வேட்பாளர்களும் தங்கள் கருத்துரைகளை வெளியிட்டு படகின்வெற்றியை உறுதிப்படுத்தினர்.
இன்றைய நிலையில் வெற்றிலைவேட்பாளர்கள் பதபதைத்து தங்களுக்கிடையில் பல துண்டுப்பிரசுங்களை வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்கள். பாவப்படவேணும் போல இருக்கு. கணேசமூர்த்தி வெளிநாட்டுக்கு மீண்டும் போவது உறுதியாகிவட்ட நிலையில் வாங்கிய பணத்துக்காக சில மூடத்தனமான பிரச்சாரங்களை மேற்கொள்வதுடன் துண்டுப்பிரசுங்களை வெளியிடுவதில் அக்கறையாக உள்ளார்.
மட்டக்களப்பில் இப்போது த.ம.வி.பு கட்சியின் வெற்றியை உறுதிப்படுத்திக்கொண்டு பல த.தே.கூ வேட்பாளர்கள் குழப்பமைந்துள்ளதாக தகவல் வெளிவருகிறது. காரணம் தலைமை வேட்பாளர் தனக்கு மட்டும் வோட்டுப்போடுங்கோ எண்டும் மற்றவர்களுக்கு வோட்டுப்போட வேண்டாம் என்றும் தனது பிரச்சாரத்தில் அவ்வப்போது குறிப்பிட்டுவந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மற்றைய சக வேட்பாளர்கள் தங்களுக்கு ஆசனம் இல்லை என்ற நிலைமையில் இப்போது மட்டக்களப்புக்குரிய தனித்துவக்கட்சிக்கு மாத்திரம் போடுமாறு தங்கள் ஆதரவாளர்களிடம் சொல்லிக்கொண்டிருப்பது தலைமை வேட்பாளருக்கு கோபத்தை தூண்டுதாம் இதனால் இவர்களை கட்சியிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கபோவதாக எச்சரித்துள்ளார்.
மட்டக்களப்பில் வேறொரு பொருத்தமான தலைமை வேட்பாளரை நியமித்திருந்தால் இந்தப்பிரச்சனை வந்திருக்காது. இவரின் ஆசன நப்பாசையாலதானாம் பல வேட்பாளர்கள் வெற்றிலையுடனும் சூரியனுடனும் சேர்ந்தார்களாம். நவத்தார் மட்டக்களப்பு மண்ணுக்கு தமிழ் துரோகம் பண்ணுவதாக வெற்றிலை வேட்பாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர். இதற்கெல்லாம் பல இலட்சக்கணக்கான காசுகளை வாங்கியவர் துண்டுப்பபிரசுரம் வெளியிடுவதிலே அக்கறை செலுத்தியுள்ளார். இதனிடையில் காத்தான்குடி வேட்பாளர்கள் ஏறாவூருக்கு போக முடியாத நிலையும் அதேபோல் ஏறாவூர்க்காரர்கள் காத்தான்குடிக்கும் போக முடியாத நிலையை இரு வெற்றிலை வேட்பாளர்கள் தோற்றிவைத்துள்ளனர்.
ஆனாலும் தமிழ்மக்கள் தமிழ்ச்சிந்தனையுடன் புதிய அபிவிருத்தி என்ற நோக்கத்துடனும் சிந்திக்கிறது நல்ல விடயம். இதற்கிடையில் இன்னொரு துண்டுப்பிரசுரம் வெளிவிடப்பட்டிருக்கிறதாம் "வீட்டில் வழியும் வோட்டுக்கள் படகுக்கே" என்று ஆனால் இவர்களுக்குத் தெரியாதா இப்போ வீடு இல்லாத நிலையில் படகின் மூலம் தான் வீடு கட்டப்போகிறோம் என்று...
மட்டக்களப்பு தமிழ்பேசும் சமூகம் விழிப்படைந்திருப்பது வரவேற்க்கத்தக்க விடயம். இப்போதுதான் சரியான தெரிவை வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்கள். அபிவிருத்தி என்ற முனைப்போடு களம் இறக்கியிருக்கிறார்கள்.
படகின் வெற்றி கிழக்கின் அபிவிருத்தி என்பது வரலாற்றின் சிறப்பு.
Labels:
இலங்கை,
தேர்தல் களம்,
பாராளுமன்றத்தேர்தல்,
மட்டக்களப்பு
Sunday, April 4, 2010
மேள தாள வாத்தியங்களும் பிச்சைகேட்கும் இரவு
என்ன இது புதுத்தலைப்பாக இருக்கு எண்டு யோசிக்காதீங்க மட்டக்களப்பு களுதாவளைக் கிராமத்தில் மாபெரும் கூட்டம்( மொத்தமா 20 பேர் இருப்பர்) வெத்திலைக்கு வோட்டுப்போடுங்கோ எண்டு குணத்தார் தலைமையில் ஆட்கள் இருபதளவில் இப்பொழுது பறைமேள தாளங்களுடன் வீடு வீடாக தட்டி எழுப்பிக்கொண்டிருக்கிறார்கள். பாவம் நித்திரைகொள்ள விடமாட்டார்கள் வெத்திலை போடுற நேரமா இது. ஒற்றுமையின் சின்னம் இவர் மேளங்களுடன் தானா பிச்சைகேட்பது. கட்சிக்காக அரசு கொடுத்த காசு எங்கே போயிற்று??? கோயில் தலைவர் கூட வாக்குவாதப்பட்டு குடும்பத்திலும் தமிழுக்காக படகேற இவர் ஊர் மக்கள் பிழையாக நடப்பதை தட்டிக்கேட்கப்போக கோயில் தலைமையில் இவரை நீக்கி தற்காலிகமாக வேறொருவரை (சிற்பவேலைக்காரர்) வைத்திருப்பதாக உள்ளார்ந்த தகவல். இதை விட நேற்று இரவு 8.30 மணிக்குப்பின்னர் தொண்டை நோக கத்திக்கத்தி வோட்டுப்போடுங்கோ வெத்திலைக்கு எண்டு இரவுப்பிரச்சாரம் பண்ணிணார்கள் இந்த வெத்திலைக்காரர்கள் களுதாவளை மக்கள் இப்போ நல்லா யோசித்து முடிவெடுத்துவிட்டார்கள் அபிவிருத்தி எனும் படகில் ஏறி வெற்றிபெறுவது தான் தமது திண்ணம் என்று.
பாவம் குணத்தாருக்கு கணேசமூர்த்தி இன்னொரு தலையிடியாம் இன்று களுதாவளைக்கிராமத்துக்காக ஒரு துண்டுப்பிரசுரம் போடடிருக்கிறார். இதைவிட களுதாவளை மக்களில் தனக்கு செல்வாக்கு குறைந்துவிட்டதாகவும் தனகு வோட்டுக்கள் உண்மையில் தமிழ்ப்பிரதிநிதிகளை குறைக்கும் போக்குக் காணப்படுவதாகவும் தனது வேலைத்தள சக உத்தியோகத்தர்களிடம் பகிர்ந்திருக்கிறார். நிலைமை இப்படி மோசமாகிக்கொண்டிருக்க சிலவேளை குணத்தார் ஒதுங்கும் நிலைமை வெகு தொலைவில் இல்லை இது கூத்தனின் கூற்று...
பாவம் குணத்தாருக்கு கணேசமூர்த்தி இன்னொரு தலையிடியாம் இன்று களுதாவளைக்கிராமத்துக்காக ஒரு துண்டுப்பிரசுரம் போடடிருக்கிறார். இதைவிட களுதாவளை மக்களில் தனக்கு செல்வாக்கு குறைந்துவிட்டதாகவும் தனகு வோட்டுக்கள் உண்மையில் தமிழ்ப்பிரதிநிதிகளை குறைக்கும் போக்குக் காணப்படுவதாகவும் தனது வேலைத்தள சக உத்தியோகத்தர்களிடம் பகிர்ந்திருக்கிறார். நிலைமை இப்படி மோசமாகிக்கொண்டிருக்க சிலவேளை குணத்தார் ஒதுங்கும் நிலைமை வெகு தொலைவில் இல்லை இது கூத்தனின் கூற்று...
Labels:
இலங்கை,
தேர்தல் களம்,
பாராளுமன்றத்தேர்தல்,
மட்டக்களப்பு
Friday, April 2, 2010
சிங்கள அரசியலும் துணைபோகும் தமிழ் விசமிகளும்
கிழக்கு மதகாணத்தில் அம்பாறை மாவட்டம் முற்றுமுழுதாக சிங்கள மற்றும் முஸ்லிம்களின் ஆதிக்கத்தினால் தமிழ்மக்கள் ஒடுக்கப்பட்டு வருவதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது. இதனால் தமிழ்ப் பிரதேசங்களும் சிங்கள இராச்சியமாக்கப்பட்டு வருகிறது. இதற்கு துணைபோகும் வெற்றிலைச் சின்னத்தில் போட்டிஇடும் தமிழர்கள் இது பற்றி உணர முடியாமல் தலையாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
இதைப் போல திருகோணமலை மாவட்டத்தின் நிலைமை கூட தமிழ்ப்பிரதிநிதித்துவத்தை இழப்பது போலத் தெரிகிறது.. இது சம்பந்தமாக விரிவான விளக்கியிருக்கிறது ஒருவலைப்பதிவு
இது சிங்கள அரசியல் தலைமைத்துவத்தின் தமிழின மக்களுக்கான வீழ்ச்சியை ஏற்படுத்தி சிங்கள தலைமைத்துவத்தை நிலைநிறுத்தும் தன்மையை வெளிக்கொணர்கிறது. ஏனெனில் இலங்கை அரசு வடக்கு மாகாணத்தை தனிமைப்படுத்தி கிழக்கு மாகாணத்தில் தமிழர் பிரதிநிதிக்துவத்தை பாராளுமன்றத்தில் குறைத்து புதிய அரசியல் தந்துரோபாயங்களை மேற்கொண்டு தமிழர் பிரச்சனையை ஓரங்கட்டப்பார்க்கிறது.
இதே போல் மட்டக்களப்பிலும் தனது கூலிப்படைகளால் புதிய புதிய கட்சிகளையும் அதிக சுயேட்சைகளையும் வேட்பாளர்களையும் போட்டியிட வைத்து தமிழின பிரதிநிதிகளைக் குறைத்து முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளைக் கூட்டிக்கொள்ள அரசியல் தன்மையைக்காட்டுகிறது.
இதனால் கிழக்கு மாகாணத்துக்கோ வடக்கு மாகாணத்துக்கோ தனித் தலைமைத்துவங்களோ அல்லது ஒட்டுமொத்த தமிழ்ப் பிரதிநிதித்துவ தலைமைத்துவங்களோ உருவாவதைத் தடுக்கும் செய்ற்பாடாக இது அமைகிறது.
ஆனால் தற்போது கிழக்கு மாகாணத்துக்கு உரிய தனித்துவமான கட்சியும் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியுமான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி களம் இறங்கியிருப்பது தமிழ்ப் பிரதிநிதிகளை அதிகரிக்கவே. மாறாக இவர்கள் மீது ஆயுதக்கட்சி என்றும் தமிழ்துரோகப் பிழையும் கூறப்படுவதால் சற்று பின்னடைவை எதிர்கொள்வது தெரிகிறது. ஆனால் இக்கட்சி மட்டுமே தமிழர்களின் தனியான கிழக்கு மக்களின் உாழமையான கட்சியாகும் என்பதை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். இல்லையேல் இவர்கள் அரசுடன் இணைந்து போட்டியிட்டிருக்கலாம் அல்லது தங்கள் சுயலாபத்துக்காக எதிர்க்கட்சியுடன் பேரம் பேசி இருக்கலாம். இவற்றையெல்லாம் விடுத்து தனிக்கட்சியாக அதுவும் வாக்கு வங்கிகளை அதிகளவில் கொண்ட தமிழரசுக் கட்சிகளுக்கு சவால் விடுத்து இறங்கியருப்பது வரவேற்கத்தக்க விடயம். இதனை விட சிங்கள அரசியல் தந்திரங்களுக்கு எதிராக குரல் கொடுத்து யாராவது தமிழக்கட்சிக்கே வோட்டுப்போடுங்கள் என்றும் வீட்டுக்கு போடாவிட்டால் வோட்டுக்கு(Boat)க்கு போடுங்கோ என்றும் வீட்டின் தலைமைகள் இதுவரை மட்டக்களப்புக்கு வந்த சரித்திரம் இல்லை இம்மட்டக்களப்பை ஒதுக்கி வேடிக்கைபார்த்ததே இக்கட்சியின் தலைவர்கள் தங்கள் சுயலாபம் கருதி செயற்பட்டு த.வி.பு களை சாட்டுக்கூறி தாங்கள் சுயஆட்சி சுயமானிலம் என்று வாயைப்பிளந்து அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் நிலை நிறுத்தப்பட்டவர்களே இவர்கள்.
அவர்களால் தமிழினம் அழிந்தபோது தங்கள் பதிவிகளைத்துறந்ார்களா??? இல்லை இதனை மறுத்து ஏதாச்சும் பெரியளவில் செய்தார்களா??? வெறுமனே ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்துக்கொண்டிருந்தார்கள்ஃ அரசியல் குளிர்காய்ந்தார்கள். இப்போது மட்டக்களப்பிற்கு வருகை தந்து மீண்டும் பிச்சை கேட்கிறார்கள்.
ஆக முதலமைச்சர் தலைமைதாங்கும் த.ம.வி.பு கட்சி அதன் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் இவர்களைப்பற்றி காரசாரமாக கதைத்து வருகிறது வரவேற்கத்தக்கது.
கிழக்கு மாகாணத்திலே ஒரு தலைமை உருவாகி கிழக்கு மாகான சபை மூலம் எமது பிரதேசங்கள் அபிவிருத்தி செய்யப்படுகின்றன. எமது மக்கள் நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.அரசியல் அபிலாசைகளுக்காக நாம் வாக்களிக்காமல் தமிழ்ப்பிரதேச அபிவிருத்திக்கும் மட்டக்களப்பு மண்ணின் உயர்ச்சிக்காகவும் படகுச்சின்னத்துக்க்காக வாக்களிப்பது சாலச்சிறந்தது.
Labels:
இலங்கை,
தேர்தல் களம்,
பாராளுமன்றத்தேர்தல்,
மட்டக்களப்பு
Monday, March 29, 2010
விலைபோகும் வாக்குகள் - மட்டக்களப்பு
மட்டக்களப்புத் தேர்தல் ஏனோ தானோ ஆனதாக இருக்கிறது.. தமிழர்கள் மத்தியில் தான் குழப்ப நிலை என்றால் முஸ்லிம் சமூகத்திலும் இதே நிலைமை தான்... காத்தான்குடி ஹிஸ் வேட்பாளர் தங்கள் ஊரில் சொல்லியிருக்கிறார் "நீங்க வோட்டுப் போடாட்டிலும் பரவாயில்ல எனக்குத் தமிழ் மக்கள் போடுவானுகள். அவனுகளுக்கு காசக்காட்டினால் போதும்" என்று தமது இருப்பு கை நழுவிப்போகின்றதால் இவ'வாறு புலம்பியிருக்கிறார்.
இது சரி போலத்தான் தெரிகிறது.. இன்று ஒரு பிரசாரக்கூட்டத்தில் தமிழ்ப்பிரதேசத்தில் இவருக்கு பாராட்டு விழாவாம் அங்கு இவர் உரை நிகழ்த்தும் போது இவரது செயலாளர் கூறியிருக்கிறார் " தமிழர்களே நீங்கள் வோட்டுப்பாடாவிட்டாலும் பரவாயில்ல நீங்க தந்த இந்த மரியாதையும் பாராட்டு நிகழ்வும் எங்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்கும் வாழ்நாளில் மறக்கமுடியாதான நிகழ்வாக இது உள்ளது" என்றிருக்கிறார்.
இத்தமிழ்கிராமத்திற்கு இந்த ஹிஸ் ஆனவர் பல உதவிகளைச் செய்திருக்கிறாராம். அதனால் இவருக்குத் தானாம் வோட்டுப்போடனுமாம்.
இவருக்குத் தெரியாது இதற்கு முதல் அமிர் நாயகன் தான் வந்து இதே பாராட்டையும் வாழ்த்தையும் பெற்றுச் சென்றவர்.
இதுக்கெல்லாம் காரணமானவர் ஒரு பிள்ளையார் கோவில் கட்டுராராம். அவரின் தம்பி கூட ஒரு போராளி இசைத்துறையில் விற்பன்னன் சீயான் சேது போன்றவர் .இப்போது கட்டாரில் வசிக்கிறார்.
தமிழினமே கேளடா
அழிவது யாரடா
அழிப்பது யாரடா
இது சரி போலத்தான் தெரிகிறது.. இன்று ஒரு பிரசாரக்கூட்டத்தில் தமிழ்ப்பிரதேசத்தில் இவருக்கு பாராட்டு விழாவாம் அங்கு இவர் உரை நிகழ்த்தும் போது இவரது செயலாளர் கூறியிருக்கிறார் " தமிழர்களே நீங்கள் வோட்டுப்பாடாவிட்டாலும் பரவாயில்ல நீங்க தந்த இந்த மரியாதையும் பாராட்டு நிகழ்வும் எங்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்கும் வாழ்நாளில் மறக்கமுடியாதான நிகழ்வாக இது உள்ளது" என்றிருக்கிறார்.
இத்தமிழ்கிராமத்திற்கு இந்த ஹிஸ் ஆனவர் பல உதவிகளைச் செய்திருக்கிறாராம். அதனால் இவருக்குத் தானாம் வோட்டுப்போடனுமாம்.
இவருக்குத் தெரியாது இதற்கு முதல் அமிர் நாயகன் தான் வந்து இதே பாராட்டையும் வாழ்த்தையும் பெற்றுச் சென்றவர்.
இதுக்கெல்லாம் காரணமானவர் ஒரு பிள்ளையார் கோவில் கட்டுராராம். அவரின் தம்பி கூட ஒரு போராளி இசைத்துறையில் விற்பன்னன் சீயான் சேது போன்றவர் .இப்போது கட்டாரில் வசிக்கிறார்.
தமிழினமே கேளடா
அழிவது யாரடா
அழிப்பது யாரடா

