Friday, April 2, 2010

சிங்கள அரசியலும் துணைபோகும் தமிழ் விசமிகளும்

கிழக்கு மதகாணத்தில் அம்பாறை மாவட்டம் முற்றுமுழுதாக சிங்கள மற்றும் முஸ்லிம்களின் ஆதிக்கத்தினால் தமிழ்மக்கள் ஒடுக்கப்பட்டு வருவதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது. இதனால் தமிழ்ப் பிரதேசங்களும் சிங்கள இராச்சியமாக்கப்பட்டு வருகிறது. இதற்கு துணைபோகும் வெற்றிலைச் சின்னத்தில் போட்டிஇடும் தமிழர்கள் இது பற்றி உணர முடியாமல் தலையாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
இதைப் போல திருகோணமலை மாவட்டத்தின் நிலைமை கூட தமிழ்ப்பிரதிநிதித்துவத்தை இழப்பது போலத் தெரிகிறது.. இது சம்பந்தமாக விரிவான விளக்கியிருக்கிறது ஒருவலைப்பதிவு
இது சிங்கள அரசியல் தலைமைத்துவத்தின் தமிழின மக்களுக்கான வீழ்ச்சியை ஏற்படுத்தி சிங்கள தலைமைத்துவத்தை நிலைநிறுத்தும் தன்மையை வெளிக்கொணர்கிறது. ஏனெனில் இலங்கை அரசு வடக்கு மாகாணத்தை தனிமைப்படுத்தி கிழக்கு மாகாணத்தில் தமிழர் பிரதிநிதிக்துவத்தை பாராளுமன்றத்தில் குறைத்து புதிய அரசியல் தந்துரோபாயங்களை மேற்கொண்டு தமிழர் பிரச்சனையை ஓரங்கட்டப்பார்க்கிறது.
இதே போல் மட்டக்களப்பிலும் தனது கூலிப்படைகளால் புதிய புதிய கட்சிகளையும் அதிக சுயேட்சைகளையும் வேட்பாளர்களையும் போட்டியிட வைத்து தமிழின பிரதிநிதிகளைக் குறைத்து முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளைக் கூட்டிக்கொள்ள அரசியல் தன்மையைக்காட்டுகிறது.
இதனால் கிழக்கு மாகாணத்துக்கோ வடக்கு மாகாணத்துக்கோ தனித் தலைமைத்துவங்களோ அல்லது ஒட்டுமொத்த தமிழ்ப் பிரதிநிதித்துவ தலைமைத்துவங்களோ உருவாவதைத் தடுக்கும் செய்ற்பாடாக இது அமைகிறது.
ஆனால் தற்போது கிழக்கு மாகாணத்துக்கு உரிய தனித்துவமான கட்சியும் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியுமான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி களம் இறங்கியிருப்பது தமிழ்ப் பிரதிநிதிகளை அதிகரிக்கவே. மாறாக இவர்கள் மீது ஆயுதக்கட்சி என்றும் தமிழ்துரோகப் பிழையும் கூறப்படுவதால் சற்று பின்னடைவை எதிர்கொள்வது தெரிகிறது. ஆனால் இக்கட்சி மட்டுமே தமிழர்களின் தனியான கிழக்கு மக்களின் உாழமையான கட்சியாகும் என்பதை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். இல்லையேல் இவர்கள் அரசுடன் இணைந்து போட்டியிட்டிருக்கலாம் அல்லது தங்கள் சுயலாபத்துக்காக எதிர்க்கட்சியுடன் பேரம் பேசி இருக்கலாம். இவற்றையெல்லாம் விடுத்து தனிக்கட்சியாக அதுவும் வாக்கு வங்கிகளை அதிகளவில் கொண்ட தமிழரசுக் கட்சிகளுக்கு சவால் விடுத்து இறங்கியருப்பது வரவேற்கத்தக்க விடயம். இதனை விட சிங்கள அரசியல் தந்திரங்களுக்கு எதிராக குரல் கொடுத்து யாராவது தமிழக்கட்சிக்கே வோட்டுப்போடுங்கள் என்றும் வீட்டுக்கு போடாவிட்டால் வோட்டுக்கு(Boat)க்கு போடுங்கோ என்றும் வீட்டின் தலைமைகள் இதுவரை மட்டக்களப்புக்கு வந்த சரித்திரம் இல்லை இம்மட்டக்களப்பை ஒதுக்கி வேடிக்கைபார்த்ததே இக்கட்சியின் தலைவர்கள் தங்கள் சுயலாபம் கருதி செயற்பட்டு த.வி.பு களை சாட்டுக்கூறி தாங்கள் சுயஆட்சி சுயமானிலம் என்று வாயைப்பிளந்து அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் நிலை நிறுத்தப்பட்டவர்களே இவர்கள்.
அவர்களால் தமிழினம் அழிந்தபோது தங்கள் பதிவிகளைத்துறந்ார்களா??? இல்லை இதனை மறுத்து ஏதாச்சும் பெரியளவில் செய்தார்களா??? வெறுமனே ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்துக்கொண்டிருந்தார்கள்ஃ அரசியல் குளிர்காய்ந்தார்கள். இப்போது மட்டக்களப்பிற்கு வருகை தந்து மீண்டும் பிச்சை கேட்கிறார்கள்.
ஆக முதலமைச்சர் தலைமைதாங்கும் த.ம.வி.பு கட்சி அதன் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் இவர்களைப்பற்றி காரசாரமாக கதைத்து வருகிறது வரவேற்கத்தக்கது.
கிழக்கு மாகாணத்திலே ஒரு தலைமை உருவாகி கிழக்கு மாகான சபை மூலம் எமது பிரதேசங்கள் அபிவிருத்தி செய்யப்படுகின்றன. எமது மக்கள் நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.அரசியல் அபிலாசைகளுக்காக நாம் வாக்களிக்காமல் தமிழ்ப்பிரதேச அபிவிருத்திக்கும் மட்டக்களப்பு மண்ணின் உயர்ச்சிக்காகவும் படகுச்சின்னத்துக்க்காக வாக்களிப்பது சாலச்சிறந்தது.

Monday, March 29, 2010

விலைபோகும் வாக்குகள் - மட்டக்களப்பு

மட்டக்களப்புத் தேர்தல் ஏனோ தானோ ஆனதாக இருக்கிறது.. தமிழர்கள் மத்தியில் தான் குழப்ப நிலை என்றால் முஸ்லிம் சமூகத்திலும் இதே நிலைமை தான்... காத்தான்குடி ஹிஸ் வேட்பாளர் தங்கள் ஊரில் சொல்லியிருக்கிறார் "நீங்க வோட்டுப் போடாட்டிலும் பரவாயில்ல எனக்குத் தமிழ் மக்கள் போடுவானுகள். அவனுகளுக்கு காசக்காட்டினால் போதும்" என்று தமது இருப்பு கை நழுவிப்போகின்றதால் இவ'வாறு புலம்பியிருக்கிறார்.

இது சரி போலத்தான் தெரிகிறது.. இன்று ஒரு பிரசாரக்கூட்டத்தில் தமிழ்ப்பிரதேசத்தில் இவருக்கு பாராட்டு விழாவாம் அங்கு இவர் உரை நிகழ்த்தும் போது இவரது செயலாளர் கூறியிருக்கிறார் " தமிழர்களே நீங்கள் வோட்டுப்பாடாவிட்டாலும் பரவாயில்ல நீங்க தந்த இந்த மரியாதையும் பாராட்டு நிகழ்வும் எங்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்கும் வாழ்நாளில் மறக்கமுடியாதான நிகழ்வாக இது உள்ளது" என்றிருக்கிறார்.
இத்தமிழ்கிராமத்திற்கு இந்த ஹிஸ் ஆனவர் பல உதவிகளைச் செய்திருக்கிறாராம். அதனால் இவருக்குத் தானாம் வோட்டுப்போடனுமாம்.
இவருக்குத் தெரியாது இதற்கு முதல் அமிர் நாயகன் தான் வந்து இதே பாராட்டையும் வாழ்த்தையும் பெற்றுச் சென்றவர்.
இதுக்கெல்லாம் காரணமானவர் ஒரு பிள்ளையார் கோவில் கட்டுராராம். அவரின் தம்பி கூட ஒரு போராளி இசைத்துறையில் விற்பன்னன் சீயான் சேது போன்றவர் .இப்போது கட்டாரில் வசிக்கிறார்.
தமிழினமே கேளடா
அழிவது யாரடா
அழிப்பது யாரடா

Sunday, March 28, 2010

மட்டக்களப்பில் இன்றைய அரசியல் -01

பாராளுமன்றத்தேர்தல் 2010 இல் மட்டக்களப்பின் அரசியல் தாக்கம் எவ்வாறு இருக்கப்போகிறது என்ற எண்ணம் மட்டக்களப்பில் மட்டுமல்லாது முழு இலங்கையையும் ஏன் எல்லாத் தமிழர்களையும் பாதிக்கப்படக்கூயதாக இருக்கின்ற விடயமாக உள்ளது.

தமிழர் பிரச்சனை என்றும் தமிழ் இனப்பிரச்சனை என்றும் தலையாய பிரதான செய்தியாகவும் பிரச்சாரமாகவும் கொண்டு கடந்த மூன்று தசாப்பதங்களாக இருந்துவந்த தேர்தலும் அதற்கு துணைபோந்தவர்களும் ஆக தமிழ் மக்கள் பல வற்றை இழந்து உயிர்களையும் இழந்து இனி இழப்பதற்கு தமிழர் என்ற பெயர் மட்டுமே எஞ்சியுள்ளது.
இந்த யுத்தத்தினை மையப்படுத்திய எல்லா அரசியலும் ஏனைய சமூகங்களும் தம்மை நீடித்து நிலைக்கும் தன்மைக்கும் தங்கள் அரசியல் அபிலாசைகளுக்கும் துணைபோனவர்களால் தமிழர் பிரச்சனை தீர்வுகாண முடியாமல் போய்க்கொண்டிருப்பதால் வெறுமனே நாம் எப்போதும் எதிர்கட்சியில் இருந்து ஊடகங்களுக்கு குரல் கொடுக்கும் ஊதுகுழல்களே!!! சற்று விழித்திடுங்கள் இரண்டு தசாப்பத்தகளுக்கு மேலாக அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவர்களை வைத்திருந்து என்ன லாபம். இதுவரை அவாகளால் கேள்வியும் பதில் கிடைக்காமல் போன ஊடகங்களை அழைத்து தாங்கள் செயற்படுகிறோம் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருப்பதால் என்ன தமிழ் மக்களுக்கு கிடைத்தது.??கிடைக்கிறது??? கிடைக்கப்போகிறது.???

இதனால் சிந்தியுங்கள் சிந்தியுங்கள் என்று தமிழ் மக்களை சொல்லுவதால் எல்லா பாமர மக்களுக்கும் இத்தால் என்ன சொல்லப்போகிறார்கள். இதுவரை நாம் இருந்த நிலை வேறு இனி நாம் வேறு பாதையில் சுயாட்சி சுய உரிமை இனித்தான் கேட்கலாம் என்று இன்னுமின்னும் ஏமாற்ற விளைகிறார்களா???

ஆகவே புதிய தலைமுறைகளுக்கும் புதிய விடயங்களுக்கும் முன்னுரிமை கொடுத்து புதிய அரசில் தந்துரோபாயங்களை நிலை நிறுத்துவதற்காக இனி இணைவோம். ஏனெனில் பழமைவாதிகள் மாறமாட்டாரகள் இதுவரை தாம் அனுபவித்து வந்த சுகபோக வாழ்க்கையை விட்டுக்காடுப்பதில் இவர்களுக்கு கஸ்டமான விடயம்.
இதன் காரணமாக இத்தேர்தலில் தமிழமக்கள் தங்கள் பிரதேசங்களில் அபிவிருத்தியை மையப்படுத்திய கட்சிக்கும் அதில் இனம் மாறாத நல்ல கொள்ளைகளை வகுத்துக்கொண்டவர்களை தெரிவு செய்தல் தமிழர்களாகிய நமது கடமையே.

மட்டக்களப்பில் இன்னும் என்ன என்ன அபிவிருத்திகளை மேற்கொள்ளப்பட வேண்டுமென அடுத்த பதிவில் பகிர்கிறேன்.
வாருங்கள் ஊர் கூடி
தமிழ் தேர் இழுப்போம்
பலம் கொள்வோம்.