பாராளுமன்றத்தேர்தல் 2010 இல் மட்டக்களப்பின் அரசியல் தாக்கம் எவ்வாறு இருக்கப்போகிறது என்ற எண்ணம் மட்டக்களப்பில் மட்டுமல்லாது முழு இலங்கையையும் ஏன் எல்லாத் தமிழர்களையும் பாதிக்கப்படக்கூயதாக இருக்கின்ற விடயமாக உள்ளது.
தமிழர் பிரச்சனை என்றும் தமிழ் இனப்பிரச்சனை என்றும் தலையாய பிரதான செய்தியாகவும் பிரச்சாரமாகவும் கொண்டு கடந்த மூன்று தசாப்பதங்களாக இருந்துவந்த தேர்தலும் அதற்கு துணைபோந்தவர்களும் ஆக தமிழ் மக்கள் பல வற்றை இழந்து உயிர்களையும் இழந்து இனி இழப்பதற்கு தமிழர் என்ற பெயர் மட்டுமே எஞ்சியுள்ளது.
இந்த யுத்தத்தினை மையப்படுத்திய எல்லா அரசியலும் ஏனைய சமூகங்களும் தம்மை நீடித்து நிலைக்கும் தன்மைக்கும் தங்கள் அரசியல் அபிலாசைகளுக்கும் துணைபோனவர்களால் தமிழர் பிரச்சனை தீர்வுகாண முடியாமல் போய்க்கொண்டிருப்பதால் வெறுமனே நாம் எப்போதும் எதிர்கட்சியில் இருந்து ஊடகங்களுக்கு குரல் கொடுக்கும் ஊதுகுழல்களே!!! சற்று விழித்திடுங்கள் இரண்டு தசாப்பத்தகளுக்கு மேலாக அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவர்களை வைத்திருந்து என்ன லாபம். இதுவரை அவாகளால் கேள்வியும் பதில் கிடைக்காமல் போன ஊடகங்களை அழைத்து தாங்கள் செயற்படுகிறோம் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருப்பதால் என்ன தமிழ் மக்களுக்கு கிடைத்தது.??கிடைக்கிறது??? கிடைக்கப்போகிறது.???
இதனால் சிந்தியுங்கள் சிந்தியுங்கள் என்று தமிழ் மக்களை சொல்லுவதால் எல்லா பாமர மக்களுக்கும் இத்தால் என்ன சொல்லப்போகிறார்கள். இதுவரை நாம் இருந்த நிலை வேறு இனி நாம் வேறு பாதையில் சுயாட்சி சுய உரிமை இனித்தான் கேட்கலாம் என்று இன்னுமின்னும் ஏமாற்ற விளைகிறார்களா???
ஆகவே புதிய தலைமுறைகளுக்கும் புதிய விடயங்களுக்கும் முன்னுரிமை கொடுத்து புதிய அரசில் தந்துரோபாயங்களை நிலை நிறுத்துவதற்காக இனி இணைவோம். ஏனெனில் பழமைவாதிகள் மாறமாட்டாரகள் இதுவரை தாம் அனுபவித்து வந்த சுகபோக வாழ்க்கையை விட்டுக்காடுப்பதில் இவர்களுக்கு கஸ்டமான விடயம்.
இதன் காரணமாக இத்தேர்தலில் தமிழமக்கள் தங்கள் பிரதேசங்களில் அபிவிருத்தியை மையப்படுத்திய கட்சிக்கும் அதில் இனம் மாறாத நல்ல கொள்ளைகளை வகுத்துக்கொண்டவர்களை தெரிவு செய்தல் தமிழர்களாகிய நமது கடமையே.
மட்டக்களப்பில் இன்னும் என்ன என்ன அபிவிருத்திகளை மேற்கொள்ளப்பட வேண்டுமென அடுத்த பதிவில் பகிர்கிறேன்.
வாருங்கள் ஊர் கூடி
தமிழ் தேர் இழுப்போம்
பலம் கொள்வோம்.
0 comments:
Post a Comment