பாராளுமன்றத் தேர்தல் நாளை மறுதினம். படக் படக்கென்று த. தே. கூட்டமைப்பு இருக்கும் தருணம். மட்டக்களப்பில் தேர்தல் முடிவுகள் எதிர்வுகூறப்படுகின்றது. வெற்றிப்படகு முதன்முதலில் ஆட்சிப்பீடம் ஏற்கப்போவது முடிவாகிவிட்டது. தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தனது தேர்தல் பிரச்சாரங்களை 04-04-2010 ஞாயிற்றுக்கிழமை முடிவுக்கு கொண்டுவந்தது. தமது இறுதிப்பிரச்சாரத்திற்கு 8000 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து சிறப்பித்தனர். முற்றிலும் வெற்றி நிச்சயம் என்ற தொனிப்பொருள் கண்கூடாகத் தெரிந்தது.
அனைத்து வேட்பாளர்களும் தங்கள் கருத்துரைகளை வெளியிட்டு படகின்வெற்றியை உறுதிப்படுத்தினர்.
இன்றைய நிலையில் வெற்றிலைவேட்பாளர்கள் பதபதைத்து தங்களுக்கிடையில் பல துண்டுப்பிரசுங்களை வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்கள். பாவப்படவேணும் போல இருக்கு. கணேசமூர்த்தி வெளிநாட்டுக்கு மீண்டும் போவது உறுதியாகிவட்ட நிலையில் வாங்கிய பணத்துக்காக சில மூடத்தனமான பிரச்சாரங்களை மேற்கொள்வதுடன் துண்டுப்பிரசுங்களை வெளியிடுவதில் அக்கறையாக உள்ளார்.
மட்டக்களப்பில் இப்போது த.ம.வி.பு கட்சியின் வெற்றியை உறுதிப்படுத்திக்கொண்டு பல த.தே.கூ வேட்பாளர்கள் குழப்பமைந்துள்ளதாக தகவல் வெளிவருகிறது. காரணம் தலைமை வேட்பாளர் தனக்கு மட்டும் வோட்டுப்போடுங்கோ எண்டும் மற்றவர்களுக்கு வோட்டுப்போட வேண்டாம் என்றும் தனது பிரச்சாரத்தில் அவ்வப்போது குறிப்பிட்டுவந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மற்றைய சக வேட்பாளர்கள் தங்களுக்கு ஆசனம் இல்லை என்ற நிலைமையில் இப்போது மட்டக்களப்புக்குரிய தனித்துவக்கட்சிக்கு மாத்திரம் போடுமாறு தங்கள் ஆதரவாளர்களிடம் சொல்லிக்கொண்டிருப்பது தலைமை வேட்பாளருக்கு கோபத்தை தூண்டுதாம் இதனால் இவர்களை கட்சியிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கபோவதாக எச்சரித்துள்ளார்.
மட்டக்களப்பில் வேறொரு பொருத்தமான தலைமை வேட்பாளரை நியமித்திருந்தால் இந்தப்பிரச்சனை வந்திருக்காது. இவரின் ஆசன நப்பாசையாலதானாம் பல வேட்பாளர்கள் வெற்றிலையுடனும் சூரியனுடனும் சேர்ந்தார்களாம். நவத்தார் மட்டக்களப்பு மண்ணுக்கு தமிழ் துரோகம் பண்ணுவதாக வெற்றிலை வேட்பாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர். இதற்கெல்லாம் பல இலட்சக்கணக்கான காசுகளை வாங்கியவர் துண்டுப்பபிரசுரம் வெளியிடுவதிலே அக்கறை செலுத்தியுள்ளார். இதனிடையில் காத்தான்குடி வேட்பாளர்கள் ஏறாவூருக்கு போக முடியாத நிலையும் அதேபோல் ஏறாவூர்க்காரர்கள் காத்தான்குடிக்கும் போக முடியாத நிலையை இரு வெற்றிலை வேட்பாளர்கள் தோற்றிவைத்துள்ளனர்.
ஆனாலும் தமிழ்மக்கள் தமிழ்ச்சிந்தனையுடன் புதிய அபிவிருத்தி என்ற நோக்கத்துடனும் சிந்திக்கிறது நல்ல விடயம். இதற்கிடையில் இன்னொரு துண்டுப்பிரசுரம் வெளிவிடப்பட்டிருக்கிறதாம் "வீட்டில் வழியும் வோட்டுக்கள் படகுக்கே" என்று ஆனால் இவர்களுக்குத் தெரியாதா இப்போ வீடு இல்லாத நிலையில் படகின் மூலம் தான் வீடு கட்டப்போகிறோம் என்று...
மட்டக்களப்பு தமிழ்பேசும் சமூகம் விழிப்படைந்திருப்பது வரவேற்க்கத்தக்க விடயம். இப்போதுதான் சரியான தெரிவை வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்கள். அபிவிருத்தி என்ற முனைப்போடு களம் இறக்கியிருக்கிறார்கள்.
படகின் வெற்றி கிழக்கின் அபிவிருத்தி என்பது வரலாற்றின் சிறப்பு.
0 comments:
Post a Comment